இலங்கை
அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்சவாம்!

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்சவாம்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதியென்பதை புலனாய்வுப் பிரிவு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நாமல்தான் அடுத்த ஜனாதிபதியென்பது தற்போதைய ஆட்சியாளர்களுக்குத் தெரியும். புலனாய்வுப் பிரிவுகள் இது தொடர்பில் அனைத்து அறிக்கைகளையும் கையளித்துள்ளன. தெற்காசியாவில் உருவாகும் இளம் தலைவராக நாமல் இருப்பார். வெளிநாடுகள் எம்முடன் பேச்சு நடத்துகின்றன. தூதரகங்களுக்கு சென்றால்கூட அடுத்த தலைவர் என்றே நாமலை விளிக்கின்றனர் -என்றார்.