இலங்கை

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்சவாம்!

Published

on

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்சவாம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதியென்பதை புலனாய்வுப் பிரிவு அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
நாமல்தான் அடுத்த ஜனாதிபதியென்பது தற்போதைய ஆட்சியாளர்களுக்குத் தெரியும். புலனாய்வுப் பிரிவுகள் இது தொடர்பில் அனைத்து அறிக்கைகளையும் கையளித்துள்ளன. தெற்காசியாவில் உருவாகும் இளம் தலைவராக நாமல் இருப்பார். வெளிநாடுகள் எம்முடன் பேச்சு நடத்துகின்றன. தூதரகங்களுக்கு சென்றால்கூட அடுத்த தலைவர் என்றே நாமலை விளிக்கின்றனர் -என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version