இலங்கை
இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கு இந்திய கடவுச்சீட்டு?

இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கு இந்திய கடவுச்சீட்டு?
இந்தியாவில் பிறந்த ‘நாடற்றவர்’ என்ற நிலையில் உள்ள இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கு இந்திய கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதாக விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை கிளை, மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தனது விண்ணப்பத்தை பரிசீலித்து இந்திய கடவுச்சீட்டை வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி 2024 இல், இலங்கையின் ஏதிலி ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்தபோதே, நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றின் இந்த உத்தரவு, இந்திய குடிமக்கள் அல்லாதவர்களுக்கு கடவுச்சீட்டுக்கள் அல்லது பயண ஆவணத்தை வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.