இலங்கை
ஆண் நண்பருடன் பழகியதை கண்டித்த கணவன் ; மாணவனுடன் சேர்ந்து சம்பவம் செய்த மனைவி

ஆண் நண்பருடன் பழகியதை கண்டித்த கணவன் ; மாணவனுடன் சேர்ந்து சம்பவம் செய்த மனைவி
திருவேற்காட்டில் ஆண் நண்பருடன் பழகியதை கண்டித்ததால் கணவனை கொன்ற மனைவி மற்றும் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவேற்காட்டில் சிவகுமார் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்துள்ளார். அவரது மனைவி விஜயகுமாரிக்கு அதே பகுதியை சேர்ந்த ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கத்தை கணவர் கண்டித்ததன் காரணமாக கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரியல் எஸ்டேட் இடைத்தரகரின் மனைவி, ஆண் நண்பர், கல்லூரி மாணவன் உள்ளிட்ட 4 பேர் இணைந்து பட்டப் பகலில் குறித்த நபரை கொலை செய்துள்ளனர்.
மனைவியின் ஆண் நண்பர் அந்த பகுதியில் கார் ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். அவரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலையை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.