இலங்கை
அதிரடியாக பதவி நீக்கப்பட்ட பௌத்த விவகார ஆணையாளர்!

அதிரடியாக பதவி நீக்கப்பட்ட பௌத்த விவகார ஆணையாளர்!
பௌத்த விவகார ஆணையாளர் பிரேமசிறி ரத்நாயக்க அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக புத்த சாசன மற்றும் மத விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது கடமைகளை முறையாகச் செய்யாததைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் 2024 ஜனவரியில் பௌத்த விவகாரங்களுக்கான ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், குறித்த பதவி வெற்றிடமாகியுள்ள நிலையில், பௌத்த விவகாரங்களுக்கான பதில் ஆணையாளராக கசுன் வெல்லஹேவா நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.