சினிமா
அகரம் ஏற்றி ஒளியூட்டும் சூர்யா!!!

அகரம் ஏற்றி ஒளியூட்டும் சூர்யா!!!
சூத்திரன் ,பஞ்சமன் ,பெண்கள் கையில் கல்வியை மட்டும் கொடுக்காதே…அது ஆபத்தானது என்கிறது வர்ணாசிரம மனுதர்மம்…
யாரை அடிமையாக்க வேண்டுமோ அவர்களை படிக்க விடாதே என்று தான் இன்றைய நாளிலும் பல தடைகள் போடப்படுகிறது.
நடிகர் சூர்யா அடித்தட்டில் கேட்பாரற்று கிடக்கும் திறமையுள்ளவர்களை
தேடித்தேடி அவர்கள் வாழ்வில் அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி ஒளி ஏற்றி வருகிறார்.
ஒரு விளக்கு பல நூறு விளக்குகளை ஏற்றும்..பல நூறு விளக்குகள் பல லட்சம் விளக்குகளை ஏற்றி வைக்கும். சங்கிலித் தொடர் நிகழ்வு இது…
நடிகர் சூர்யாவின் கல்விப்பணி மகத்தானது..திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் சூர்யா சூப்பர் ஹீரோ தான்..
அவருடைய கலைப்பணி..கல்விப்பணி மென்மேலும் சிறக்கட்டும் ..
சூர்யாவிற்க்கு வாழ்த்துக்கள்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை