Connect with us

இலங்கை

புதிய எல்லை நிர்ணயக்குழு அமைச்சரவையால் அனுமதி!

Published

on

Loading

புதிய எல்லை நிர்ணயக்குழு அமைச்சரவையால் அனுமதி!

2012ஆம் ஆண்டு மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணயக் குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து உரிய பரிந்துரைகளை முன்வைப்பதற்காக புதிய எல்லை நிர்ண யக் குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, இது தொடர்பில் நேற்று மேலும் தெரிவித்ததாவது: பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை நிறுவுதல் மற்றும் மீளாய்வு செய்வதற்காக 2012ஆம் ஆண்டு எல்லை நிர்ணயக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் ஒருசில விதந்துரைகளை மாத்திரம் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பின்னர் 2021ஆம் ஆண்டில் மீண்டும் எல்லை நிர்ணயக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவின் விதந்துரைகள் தொடர்பாக இதுவரைக்கும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே,அவற்றை மீளாய்வு செய்து விதந்துரைகளுடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன