Connect with us

இந்தியா

மாருதி சுசுகியின் முதல் மின்சார கார் உற்பத்தியை ஆரம்பித்து வைத்த பிரதமர் மோடி!

Published

on

Loading

மாருதி சுசுகியின் முதல் மின்சார கார் உற்பத்தியை ஆரம்பித்து வைத்த பிரதமர் மோடி!

அகமதாபாத்தின் ஹன்சல்பூரில் உள்ள சுசுகியின் மோட்டார் ஆலையில், சுசுகியின் முதல் உலகளாவிய மூலோபாய பேட்டரி மின்சார வாகனம் (BEV) ‘ஈ-விட்டாரா’வை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (26) செவ்வாய்க்கிழமை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வு குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் ஜப்பான் தூதர் கெய்ச்சி ஓனோ முன்னிலையில் இடம்பெற்றது.

Advertisement

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட BEVகள், ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற மேம்பட்ட சந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த மைல்கல்லுடன், இந்தியா இப்போது சுசுகியின் மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய உற்பத்தி மையமாக செயல்படும்.

கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பாவில் முதன்முதலில் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஈ-விட்டாரா, இந்தியாவில் பாரத் மொபிலிட்டி ஷோ 2025 இல் காட்சிப்படுத்தப்பட்டது. இது டொயோட்டாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட 40PL பிரத்யேக EV தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன