இலங்கை
எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் பதற்ற நிலை அதிகரிப்பு!
எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் பதற்ற நிலை அதிகரிப்பு!
அடக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சியினர் முன்னெடுத்துள்ள போராட்டத்தால் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி போராட்டக்காரர்கள் பொலிஸாரின் வீதித்தடைகளை உடைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் குறித்த பகுதியில் பொலிஸ் நீர்த்தாரை வாகனங்கள், கலகத்தடுப்பு பொலிஸார் மற்றும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
