Connect with us

இலங்கை

ரணிலுக்காக உருகும் எரிக்சொல்ஹெய்ம்!  

Published

on

Loading

ரணிலுக்காக உருகும் எரிக்சொல்ஹெய்ம்!  

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அதிருப்தி வெளியிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டில் நாடு பொருளாதார மற்றும் அரசியல் குழப்பம் அடைந்தபோது இலங்கையைக் காப்பாற்ற முன்வந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க. ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை. அவை உண்மையாக இருந்தாலும், ஐரோப்பாவில் அவை எந்தவொரு குற்றமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையையும் கொண்டிருக்காது. ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நான் முழு ஆதரவை வழங்குகிறேன். ஆனால் தயவுசெய்து உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள் என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார் .

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன