Connect with us

இலங்கை

ஆசிரியர் சேவையின் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப தீர்மானம்

Published

on

Loading

ஆசிரியர் சேவையின் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப தீர்மானம்

தொழில் கோரும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான போட்டிப் பரீட்சை உரிய காலப்பகுதியில் நடத்தப்படும் என அமைச்சு அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

Advertisement

விடயத்துடன் தொடர்புடைய வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விசாரணைகள் நிறைவு பெற்ற பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில் கோரும் பட்டதாரிகளின் ஒன்றிணைந்த சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தொழில்கோரும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளும் போது, விண்ணப்பதாரர்களின் வயதெல்லையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதற்கமைய வயதெல்லையை நீடித்து, தற்போது ஆசிரியர் சேவையின் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன