Connect with us

இலங்கை

பாடசாலை கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 9ம் வகுப்பு மாணவி ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

Published

on

Loading

பாடசாலை கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 9ம் வகுப்பு மாணவி ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

கர்நாடக மாநிலம் ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள பாடசாலை ஒன்றில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாடசாலை கழிவறையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாணவியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,

Advertisement

சுமார் 9 மாதங்களுக்கு முன்பு மாணவி அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. 

 அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், குறித்த சம்பவத்திற்கு காரணமான  மர்மநபர் குறித்து எதுவிதமான தகவல்களும் தெரியவரவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மாணவியும், குழந்தையும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மாணவி முழுமையாக குணமடைந்த பிறகு,  அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுமி கர்ப்பமானது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறியதற்காக பாடசாலை முதல்வர், செவிலியர், விடுதி வார்டன் மற்றும் மாணவியின் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன