இலங்கை
சிறிலங்கன் எயார்லைன்ஸ் பயணிகளுக்கு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!
சிறிலங்கன் எயார்லைன்ஸ் பயணிகளுக்கு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினூடாக சிறப்பு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் 46 ஆவது நிறைவாண்டை கொண்டாடும் விதமாக இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக சிறப்பு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், செப்டம்பர் முதலாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை இந்த சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சலுகைகள் அனைத்தும் சிறிலங்கன் எயார்லைன்ஸின் உத்தியோகபூர்வ வலைத்தளம் மூலம் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
