Connect with us

இலங்கை

அரசை விமர்சிக்கும் கம்மன்பில – கைது செய்யப்பட இருப்பதாக தெரிவிப்பு!

Published

on

Loading

அரசை விமர்சிக்கும் கம்மன்பில – கைது செய்யப்பட இருப்பதாக தெரிவிப்பு!

தான் ஒரு வருடம் பிணை இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தன்னை ஒரு வருடத்திற்கு சிறையில் அடைப்பதன் மூலம், தங்களை விமர்சிப்பதை நிறுத்த முடியும் என அரசாங்கம் நினைப்பதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறை, கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணையை ஆரம்பித்திருப்பதாக கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் கம்மன்பில தெரிவித்த கருத்து தொடர்பில் ஒகஸ்ட் 12 அன்று பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த விசாரணை நடத்தப்படும் என குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மன்றில் கூறியிருந்தனர்.

Advertisement

குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது பல்வேறு சமூகங்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை முன்னாள் அமைச்சர் கூறியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன