Connect with us

சினிமா

தெரு நாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் படவா கோபி!வைரலாகும் மன்னிப்பு வீடியோ!

Published

on

Loading

தெரு நாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் படவா கோபி!வைரலாகும் மன்னிப்பு வீடியோ!

டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்தது. ஆனால், இதற்கென விலங்குகளின் நலனில் ஈடுபட்ட பிராணிகள் விரும்பிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.இந்த ஆட்சேபனைகளை தொடர்ந்து, இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட அமர்விற்கு மாற்றினார். இதனைத் தொடர்ந்து, தெரு நாய்களை கட்டாயமாக காப்பகங்களில் அடைப்பது தவறானது என கூறி, முந்தைய இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.புதிய உத்தரவின்படி, தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து, தடுப்பூசி செலுத்திய பிறகு மீண்டும் அதே இடத்தில் விடுவதை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது விலங்குகளின் வாழ்வுரிமையை மதிக்கும் வகையிலும், பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட வழிகாட்டுதலாகும்.இந்த தீர்ப்பின் பின்னணியில், கடந்த சில நாட்களாக “தெரு நாய்” விவகாரம் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் படவா கோபி கூறிய கருத்துகள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தின.விமர்சனங்களை அடுத்து, நடிகர் படவா கோபி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்புக் கேட்டார். “நான் நிகழ்ச்சியில் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. எனது கருத்தை முழுமையாக தெரிவிக்க வாய்ப்பு தரப்படவில்லை. நாய்களால் பாதிக்கப்பட்டோரும், நாய் அன்பாளர்களும் உணரும் மனநிலையை பிரதிபலிக்கவே பேசினேன்” என அவர் விளக்கம் அளித்தார்.இந்த விவகாரம், தெரு நாய்கள் குறித்து சமுதாயத்தில் பரபரப்பான விவாதங்களை உருவாக்கியுள்ளது. மக்கள் பாதுகாப்பும், விலங்குகளின் நலனும் சமநிலையில் இருக்க வேண்டும் என்ற கோணத்தில் இந்த தீர்ப்பு ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன