Connect with us

இலங்கை

மசாஜ் நிலையத்திற்குள் நுழைந்து 3 பெண்கள் வன்புனர்வு ; அதிர்ச்சியில் அழகிகள்

Published

on

Loading

மசாஜ் நிலையத்திற்குள் நுழைந்து 3 பெண்கள் வன்புனர்வு ; அதிர்ச்சியில் அழகிகள்

   பொரளையில் உள்ள மசாஜ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு பணிபுரியும் மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்ற இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மசாஜ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து பெண் மேலாலர் மற்றும் நான்கு பெண்களை அச்சுறுத்தி, அதில் மூன்று பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

Advertisement

பொலிஸ் சிறப்பு பணியக தலைமையகத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர், தப்பிச்செல்ல முற்பட்டபோது, மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார்தெரிவிக்கின்றனர்.

Advertisement

சந்தேக நபர் காவல்துறை சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு கான்ஸ்டபிள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸ் மற்றும் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன