Connect with us

இலங்கை

இஷாரா செவ்வந்தியை கைது செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை!

Published

on

Loading

இஷாரா செவ்வந்தியை கைது செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் குறித்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சமீபத்தில் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கெஹல்பத்தர பத்மே, குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இஷாரா செவ்வந்தி மீது கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க, அவர் நாட்டை விட்டு தப்பியோடி தற்போது டுபாயில் வசித்து வருவதாக கெஹல்பத்தர பத்மே வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன