உலகம்
சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் பல உயிரிழப்புக்கள்!
சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் பல உயிரிழப்புக்கள்!
மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவானது கடந்த 31 ஆம் திகதி பதிவான போதிலும் இன்று உத்தியோக பூர்வமான அறிவிப்பு வௌியாகியுள்ளது.
பலர் இந்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும்
மீட்பு பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]
