இலங்கை
ரயில்- வாகனம் விபத்து; மூவருக்குப் படுகாயம்!
ரயில்- வாகனம் விபத்து; மூவருக்குப் படுகாயம்!
வவுனியாவில் நேற்றுக் கோரம்
வவுனியாவில் நேற்று ரயிலும், பட்டாரக வாகனமும் மோதி விபத்துக்கு உள்ளானதில், நான்கு வயதுக் குழந்தை உட்பட மூவர் படுகாயமடைந்தனர். வவுனியா – மன்னார் பிரதான வீதியில் உள்ள ரயில் கடவையிலேயே இந்தக் கோரவிபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் பயணித்த கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய நான்கு வயதுக் குழந்தை ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற கடவையில் ஊழியர் ஒருவர் 24 மணிநேரமும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். எனினும், ரயில் செல்லும்போது மூடப்பட வேண்டிய பாதுகாப்புக் கடவை மூடப்படாதமையே இந்த விபத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது .வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
