Connect with us

இந்தியா

வரிகுறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும்: ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கிளம்பிய எதிர்ப்பு; ஆந்திரா ஆதரவு

Published

on

gst

Loading

வரிகுறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும்: ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கிளம்பிய எதிர்ப்பு; ஆந்திரா ஆதரவு

இன்று நடைபெற்ற முக்கியமான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்திற்கு முன்னதாக, எட்டு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களான ஹிமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் காலை உணவின்போது சந்தித்து ஒரு வியூகத்தை வகுத்தனர். ஜிஎஸ்டி விகித சீரமைப்பு முன்மொழிவு காரணமாக ஏற்படக்கூடிய வருவாய் இழப்பு குறித்து விவாதிக்க இந்த சந்திப்பு நடைபெற்றது.இந்த மாநிலங்கள் விகித சீரமைப்புக்கு ஆதரவு தெரிவித்தாலும், வருவாய் இழப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளன. வருவாய் இழப்புக்கான இழப்பீட்டு வழிமுறை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்கும் வரை, இந்த முன்மொழிவுக்கு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் ஜிஎஸ்டி விகித சீரமைப்பு முன்மொழிவுக்கு, தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) முக்கிய கூட்டாளியான ஆந்திர பிரதேசம் முழு ஆதரவை தெரிவித்துள்ளது. ஆந்திர பிரதேச நிதியமைச்சர் பாய்யாவுலா கேசவ், கூட்டணியின் பங்காளியாக இந்த முன்மொழிவை ஆதரிப்பதாகக் கூறினார்.ஜார்கண்ட் நிதியமைச்சர் ராதா கிருஷ்ணா கிஷோர் கூறுகையில், மாநிலங்கள் வாரியான வருவாய் இழப்பு புள்ளிவிவரங்கள் மற்றும் இழப்பீட்டு வழிமுறை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஜிஎஸ்டி விகித சீரமைப்பு முன்மொழிவு காரணமாக தனது மாநிலத்திற்கு ஆண்டுக்கு ₹2,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வருவாய் இழப்பு குறித்த தங்கள் கவலைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாகவும், இழப்பீடு குறித்த உறுதியளிப்பு இல்லாமல் இந்த முன்மொழிவு நிறைவேறாது என்றும் அவர் கூறினார்.”மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும், அதற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கினால் மட்டுமே, நாங்கள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்போம், இல்லையெனில் மாட்டோம்” என்று கிஷோர் கூறினார். இது வாக்களிப்பு நிலைக்குச் செல்லுமா என்று கேட்டபோது, “நமது நாடு ஒரு கூட்டாட்சி அமைப்பு மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம் என்பதால், இழப்பீடு வழங்குவது மத்திய அரசின் கடமை” என்றும், எனவே வாக்களிப்பு நிலை வரை செல்லாது என்றும் தான் கருதுவதாக கூறினார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்ஹிமாச்சல பிரதேசத்தின் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் ராஜேஷ் தர்மணி கூறுகையில், மாநிலங்களின் வருவாய் இழப்பு குறித்து விவாதித்ததாகவும், கூட்டத்தில் மத்திய அரசின் வியூகம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை உற்றுநோக்குவோம் என்றும் தெரிவித்தார். “கூட்டத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பொறுத்திருந்து பாருங்கள்” என்றார். இன்று தொடங்கும் இரண்டு நாள் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் குறித்து விரிவான விவாதம் நடத்த உள்ளனர். இந்த சீர்திருத்தங்கள் குறித்த முன்மொழிவை மத்திய அரசு ஜிஎஸ்டியின் அமைச்சர்கள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் கடந்த வெள்ளிக்கிழமையும் சந்தித்து, மத்திய அரசின் ஜிஎஸ்டி விகித சீரமைப்பு முன்மொழிவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால், வருவாய் இழப்பு குறித்து கவலையை வெளிப்படுத்தின. ஒரு கூட்டு அறிக்கையில், இந்த மாநிலங்கள் ஆண்டுக்கு ₹85,000 கோடி முதல் ₹2 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணித்து, “கூட்டாட்சி அமைப்பில் வருவாய் நலன்கள் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க” கோரியிருந்தன. 14 சதவீதத்திற்கும் குறைவான வருவாய் வளர்ச்சி ஏற்படும் பட்சத்தில், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவை கூறியிருந்தன.விகித சீரமைப்பின் பலன்கள் சாதாரண மக்களிடம் சென்றடையுமா அல்லது ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே “அதிக லாபத்தை” அளிக்குமா என்றும் மாநிலங்கள் கவலை தெரிவித்தன. சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிக்கு முன் செயல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், சாதாரண மக்கள், சிறு தொழில்முனைவோர் மற்றும் MSME-களுக்கான வரிச்சுமையைக் குறைக்கும் என்று கூறியிருந்தார். மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்த முன்மொழிவு, தற்போதுள்ள 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய பல வரி விகிதங்களுக்கு பதிலாக, ஒரு பரந்த இரண்டு அடுக்கு வரி அமைப்பை (5 சதவீதம் மற்றும் 18 சதவீதம்) முன்மொழிகிறது. இது தவிர, பாவம் மற்றும் தீமை ஏற்படுத்தும் பொருட்களுக்கு (sin and demerit goods) 40 சதவீதம் சிறப்பு வரி விகிதமும் இதில் அடங்கும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன