Connect with us

இலங்கை

தமிழர் பகுதியொன்றில் எட்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம்

Published

on

Loading

தமிழர் பகுதியொன்றில் எட்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொண்டுகள்சேனை, பூலாக்காடு, சீல்லிக்கொடி பகுதியில் உள்ள கழி ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பெரிய வேதம், பூலாக்காடு, கிரான் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய எட்டு பிள்ளைகளின் தந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

குறித்த நபர் சம்பவ தினமான நேற்று முன்தினம் (23)  தனது வீட்டிலிருந்து பூலாக்காடு, சீல்லிக்கொடி பகுதியில் உள்ள கழி ஒன்றில் மீன்பிடிப்பதற்காகச் சென்றவர், இரவாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து, அவரை உறவினர்கள் தேடிச் சென்றபோது, இன்று காலை யானைத் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, சம்பவ இடத்திற்குச் சென்ற கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஷ் ஆனந்தன் மற்றும் பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன