இலங்கை
எதிரணிகள் ஒன்றுதிரண்டால் முற்போக்குக் கூட்டணி ஆதரவு; இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!
எதிரணிகள் ஒன்றுதிரண்டால் முற்போக்குக் கூட்டணி ஆதரவு; இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு!
ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் ஓரணியில் திரண்டால் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- எதிரணிகள் ஒன்றிணைவதற்குரிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் அதனைச் செய்யவேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படும், தவறிழைக்கப்பட்டால் நிச்சயம் அவற்றை எதிர்ப்போம். மக்கள் வாக்களிக்கும் வரை அரசியலில் ஈடுபடும் எண்ணத்துடன்தான் இருக்கின்றேன் – என்றார்.
