Connect with us

இலங்கை

போலி கனடா விசாவுடன் சிக்கிய பெண்களும் ஆணும்!

Published

on

Loading

போலி கனடா விசாவுடன் சிக்கிய பெண்களும் ஆணும்!

  கனடாவுக்கு அனுப்புவதாக  போலி விசாக்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஆண் ஒருவரும் இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபர் பொரள்ளையில் வசிக்கும் 69 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 சம்பவம் தொடர்பில்  26 மற்றும் 68 வயதுடையவர்கள், கோனகனார மற்றும் பொரள்ளையில் வசிக்கும் பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 3,831,000 மற்றும் 3,436,000 ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும், இந்த சந்தேக நபர்கள் இதுபோன்ற வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன