இலங்கை
துணிவற்றவர் அநுர சாடுகிறார் வீரவன்ச!!
துணிவற்றவர் அநுர சாடுகிறார் வீரவன்ச!!
புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும் . அந்த அமைப்பின் கொடியுடன் ஜெனிவாவில் போராட்டம் நடத்த இடமளிக்கவேண்டாம் என ஐ.நா.வில் கூறுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு துணிவு என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துதுள்ளதாவது- வடக்கிலுள்ள இராணுவமுகாம்கள் அனைத்தும் அகற்றப்படும் என ஜப்பானுக்குச் சென்று ஜனாதிபதி கூறுகின்றார். படைமுகாம்கள் அகற்றப்படும் வரை அவருக்கு நித்திரை வராது போல. கனடாவில் டயஸ் போராக்களால் நிர்மாணிக்கப்பட்ட நினைவகத்துக்கு எதிராக தனது ஐ.நா. உரையில் ஒரு வசனத்தைக்கூட ஜனாதிபதி குறிப்பிடவில்லை – என்றார்.
