Connect with us

இலங்கை

குருதியில் கிருமித்தொற்று குடும்பப்பெண் உயிரிழப்பு!

Published

on

Loading

குருதியில் கிருமித்தொற்று குடும்பப்பெண் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – வற்றாப்பளைப் பகுதியைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர், குருதியில் ஏற்பட்ட கிருமித்தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

வினோதரன் வினோதா (வயது-33) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார். இடுப்பு வலி மற்றும் திடீர் சுகவீனம் காரணமாக கடந்த 28ஆம் திகதி அந்தப்பெண் மாஞ்சோலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Advertisement

இதன்போது, குருதியில் கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில், சிகிச்சையின்போது நேற்றுக்காலை உயிரிழந்தார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன