Connect with us

இந்தியா

காலணி வீச முயன்ற சம்பவம்: ‘அதிர்ச்சியடைந்தேன்; ஆனால் அது மறக்கப்பட்ட அத்தியாயம்’ – சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

Published

on

Gavai

Loading

காலணி வீச முயன்ற சம்பவம்: ‘அதிர்ச்சியடைந்தேன்; ஆனால் அது மறக்கப்பட்ட அத்தியாயம்’ – சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

கடந்த இரு தினங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்  மீது நடந்த காலணி வீச்சுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த நிகழ்வு, தன்னைக் கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இப்போது அது ஒரு மறக்கப்பட்ட அத்தியாயம் ஆகிவிட்டது என்று பி.ஆர். கவாய்  தெரிவித்துள்ளார்.வனசக்தி எதிரான இந்திய யூனியன் வழக்கில் உச்ச நீதிமன்றம் மே 16, 2025 அன்று அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுக்கள் தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, விசாரணைக்கு வந்தது. அதில், செயல்பாடுகளைத் தொடங்கிய பிறகு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான மத்திய அரசின் அறிவிப்பை நீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் ரத்து செய்திருந்தது.விசாரணையின் போது தலைமை நீதிபதி, பி.ஆர். கவாய்  “எனது மூத்த சகோதர நீதிபதியும் (நீதிபதி சந்திரன்) நானும் திங்கட்கிழமை நடந்த காலணி வீச்சு சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். ஆனால், எங்களைப் பொறுத்தவரை அது மறக்கப்பட்ட அத்தியாயம்” என்று கூறினார். எனினும், குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவரை எவ்வாறு கையாண்டிருக்க வேண்டும் என்பதில் நீதிபதி புயான் மாறுபட்ட கருத்தைக் தெரிவித்தார்.அப்போது பேசிய அவர் இந்த சம்பவம் குறித்து எனக்குச் சொந்தமான கருத்துகள் உள்ளன. அவர் இந்தியத் தலைமை நீதிபதி. இது கேலிக்குரிய விஷயம் அல்ல. அதன் பிறகும் நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று சொன்னது, இது இந்த நிறுவனத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம். பல ஆண்டுகளாக நீதிபதிகளாக, மற்றவர்கள் நியாயப்படுத்த முடியாத பல விஷயங்களை நாங்கள் செய்வோம், ஆனால் அது நாங்கள் செய்ததைப் பற்றிய எங்கள் கருத்தை மாற்றாது” என்று கூறினார்.சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் இந்தச் செயலைக் கண்டித்தார், இது “முற்றிலும் மன்னிக்க முடியாதது” என்று கூறி, குற்றவாளியைக் கடந்து செல்ல அனுமதித்த தலைமை நீதிபதியின் பெருந்தன்மையை பாராட்டினார். கடந்த அக்டோபர் 6 அன்று காலை வழக்குகளைக் குறிப்பிடும் நேரத்தில் தலைமை நீதிபதி கவாய், நீதிபதி சந்திரனுடன் அமர்ந்திருந்தார். அப்போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை செய்த, 71 வயதான கிஷோர் சிறிது நேரம் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும், தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் அவர் மீது வழக்கு தொடர வேண்டாம் என்று நீதிமன்றப் பதிவாளர் ஜெனரலிடம் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய தினமே அவர் விடுவிக்கப்பட்டார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விசாரணையின் போது, மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ கோயில் வளாகத்தில் உள்ள விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரிய மனு மீதான சமீபத்திய விசாரணையின் போது தலைமை நீதிபதியின் கருத்துக்களால் தான் “மகிழ்ச்சியடையவில்லை” என்று கிஷோர் கூறியதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன.சம்பவத்திற்குப் பிறகு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குப் பேட்டியளித்த தலைமை நீதிபதி கவாய், நான் சத்தத்தை மட்டுமே கேட்டேன். ஒருவேளை அது மேசை மீதோ அல்லது வேறு எங்காவது விழுந்திருக்கலாம். ‘நான் கவாய் சாகேப் மீது வீசினேன் என்று அவர் சொல்வதை மட்டுமே நான் கேட்டேன். ஒருவேளை அவர் வீசியது வேறு எங்கோ விழுந்திருக்கலாம், அதையே அவர் விளக்க முயன்றிருக்கலாம். வாதாடிக் கொண்டிருந்த வழக்கறிஞரிடம், அதைப் புறக்கணிக்கச் சொன்னேன். இதனால் நான் கவனச்சிதறல் அடையவில்லை. நீங்களும் கவனச்சிதறல் அடையாமல் வழக்கை மேலும் தொடரவும் என்று தலைமை நீதிபதி மேலும் கூறினார்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அகில இந்திய பார் கவுன்சில் (Bar Council of India) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கிஷோரை வழக்கறிஞர் தொழிலில் இருந்து “தற்காலிகமாக நீக்கி” உத்தரவிட்டது. அவரது நடத்தை “விதிகளுக்கும் நீதிமன்றத்தின் கண்ணியத்திற்கும் முரணானது” என்று கவுன்சில் குறிப்பிட்டது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன