Connect with us

உலகம்

பதில் தாக்குதலுக்கு தயார் – ஆப்கானிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!

Published

on

Loading

பதில் தாக்குதலுக்கு தயார் – ஆப்கானிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!

ஒரே இரவில் நடந்த மோதல்களில் 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றதாக, ஆப்கானிஸ்தான் படையினர் கூறியதை அடுத்து, “வலுவான மற்றும் பயனுள்ள பதிலடி” அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார் .

ஆப்கானிஸ்தானின் எல்லையில் “ஆத்திரமூட்டல் செயற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.  முன்னதாக, தாலிபான் பேச்சாளர் ஜபிஹுல்லா முஜாஹித், விடுத்த அறிவிப்பில், ஆப்கானிஸ்தான் படைகள் பழிவாங்கும் மற்றும் வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதில் 25 பாகிஸ்தான் இராணுவ நிலைகளைக் கைப்பற்றியதாகவும், 58 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் கூறியிருந்தார். 

Advertisement

 எனினும் இந்த தகவல்களை  உறுதிப்படுத்தாத  ஷெரீப்  தாக்குதல்களுக்கு “வலுவான மற்றும் தொழில்முறை பதில்” வழங்கியமை தொடர்பில் பாகிஸ்தானின் ஆயுதப் படைகளைப் பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது என்றும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன