Connect with us

இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; தலைமறைவான இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் அதிரடியாக கைது

Published

on

Loading

கணேமுல்ல சஞ்சீவ கொலை ; தலைமறைவான இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் அதிரடியாக கைது

  கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தலைமறைவாகவிருந்த முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்பட்டு வரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவரான கெஹெல்பத்தர பத்மே வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் அண்மையில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Advertisement

அதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நேபாள பொலிஸாரின் கூட்டு நடவடிக்கையின் போது இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றில் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன