Connect with us

இந்தியா

ஆம்னி பஸில் திடீரென பற்றி எரிந்த தீ: 20 பேர் பலி; பலர் படுகாயம்; ராஜஸ்தானில் சோகம்

Published

on

Jaisalmer Bus Fire Accident

Loading

ஆம்னி பஸில் திடீரென பற்றி எரிந்த தீ: 20 பேர் பலி; பலர் படுகாயம்; ராஜஸ்தானில் சோகம்

Jaisalmer Bus Accident: ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் நேற்று (அக்டோபர் 14) சென்று கொண்டிருந்த ஒரு ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது, மேலும் பலர் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்தீ விபத்து வேகமாகப் பேருந்து முழுவதும் பரவியது. இதனை பார்த்தவர்கள் இது குறித்து கூறுகையில், தீ விபத்து ஏற்பட்டவுடன், பயணிகள் ஓடும் பேருந்திலிருந்து குதித்துத் தப்பிக்க முயன்றனர். விபத்தில் பலியானவர்களை அடையாளம் காண, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்வருமாறு ஜெய்சால்மர் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் சிங் கூறுகையில், “ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏசி ஸ்லீப்பர் பேருந்து ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் ஒரு உதவி எண்ணைத் உருவாக்கியுள்ளது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணப் பேருந்து பயணிகளின் குடும்ப உறுப்பினர்கள் முன்வந்து உதவ வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.காயமடைந்த பயணிகள் மூன்று ஆம்புலன்ஸ்கள் மூலம் ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக ஜோத்பூருக்கு மாற்றப்பட்டனர். இது குறித்து வெளியான தகவல் வட்டாரங்களின்படி, பல பயணிகளுக்கு 70% வரை தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. பேருந்தில் மொத்தம் 57 பேர் இருந்தனர். மின்கசிவு (ஷார்ட் சர்க்யூட்) காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.A moving AC sleeper bus caught fire on the Jaisalmer-Jodhpur Highway in Jaisalmer on Tuesday, and around 20 people are feared dead, while several others have been referred to hospitals in Jodhpur, officials said. pic.twitter.com/8d3LV7QnYWஇந்தச் சம்பவத்தின் நிலைமையை ஆய்வு செய்ய முதலமைச்சர் பஜன்லால் சர்மா ஜெய்சால்மர் சென்றார். அவர் ‘எக்ஸ்’ பக்கத்தில், வெளியிட்ட அறிக்கையில், “ஜெய்சால்மரில் பேருந்து தீப்பிடித்த சம்பவம் மிகவும் மனதை நொறுக்குகிறது. இந்தத் துயர விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்துள்ளார்.பேருந்து வழக்கம் போல் ஜெய்சால்மரில் இருந்து மாலை 3 மணி அளவில் ஜோத்பூருக்குப் புறப்பட்டது. சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், தையாட் கிராமத்திற்கு அருகில் சென்றபோது, பேருந்தின் பின் பகுதியில் இருந்து திடீரெனப் புகை வரத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் தீ வேகமாகப் பேருந்து முழுவதும் பரவியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிவதைக் கண்ட அருகிலுள்ள கிராம மக்கள் மற்றும் அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்த பயணிகள் மூன்று ஆம்புலன்ஸ்கள் மூலம் ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன