Connect with us

இலங்கை

மட்டக்களப்பு விபத்து ; பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயம்

Published

on

Loading

மட்டக்களப்பு விபத்து ; பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயம்

  மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பிரதேசத்தில் பாடசாலையொன்றுக்கு முன்னால் இன்று (15) இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை நிறைவடைந்ததும் தனது மகளை அழைத்துக்கொண்டு எதிரே உள்ள பாதசாரிக் கடவையினால் வீதியைக் கடந்து சென்றவேளை தீடீரென வந்த முச்சக்கரவண்டி, தாய் மற்றும் பிள்ளையின் மீது மோதிவிட்டு அருகிலிருந்த மரக்கறிக் கடையின் மீதும் மோதியுள்ளது.

Advertisement

சம்பவத்தில் தாயும் பிள்ளையும் படுகாயங்களுக்குட்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியைச் செலுத்திய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன