Connect with us

இலங்கை

வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

Published

on

Loading

வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

  அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமும் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் காற்றுகள் ஒடுங்கும் இடம்) நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலைகளும் தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தி வருகின்றன.

அதன் காரணமாக, இன்றிலிருந்து (15ஆம் திகதி) அடுத்த சில நாட்களுக்கு நாட்டில் அதிகரித்த மழைவீழ்ச்சிக்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில்,

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன