இலங்கை
காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் 30 மணிநேர நீர்வெட்டு!
காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் 30 மணிநேர நீர்வெட்டு!
காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து 30 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது. நாளை 20ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மறுநாள் 21ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை நீர் விநியோகம் முற்றாக நிறுத்தப்படும் என்று அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
காலியில் உள்ள ஹப்புகல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கும் பிரதான குழாயில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, போபே, போத்தல, அக்மீமன மற்றும் ரத்கம ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அஹங்கம பகுதிக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
நீர் விநியோகம் தடைப்பட்டதால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை வருத்தம் தெரிவிப்பதோடு, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
