Connect with us

உலகம்

நைஜீரியாவில் எண்ணெய் கொள்கலன் லொறி வெடித்தில் 42 பேர் பலி!

Published

on

Loading

நைஜீரியாவில் எண்ணெய் கொள்கலன் லொறி வெடித்தில் 42 பேர் பலி!

நைஜீரியாவின் மத்திய நைஜர் மாநிலத்தில் மசகு எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற கொள்கலன் லொறி ஒன்று விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியதில் சுமார் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் நைஜர் மாகாணம் பீடாவில் இருந்து மசகு எண்ணெய் ஏற்றிக்கொண்டு கொள்கலன் லொறி ஒன்று அகே நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த கொள்கலன் லொறி எசான் அருகே சென்றபோது பள்ளத்தில் விழுந்து குடைசாய்ந்து கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த எசான் சுற்றுவட்டார பகுதி மக்கள் விபத்திற்குள்ளான பகுதிக்கு பாத்திரங்களை எடுத்து கொண்டு வந்தனர்.

Advertisement

பின்னர் கொள்கலன் லொறியில் இருந்து வீதியில் ஆறாக ஓடிய எண்ணெயை சேகரித்தனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த கொள்கலன் லொறி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் எண்ணெய் சேகரித்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் உள்பட 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன