இலங்கை
இளையோரிடையே பக்கவாதப் பாதிப்பு!
இளையோரிடையே பக்கவாதப் பாதிப்பு!
25 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்குப் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
ஒக்ரோபர் 29 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்படவுள்ள உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் விசேட நரம்பியல் மருத்துவர் சுரங்கி சோமரத்ன மேலும் தெரிவிக்கையில், பக்கவாத நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 30 வீதமானவர்கள் 20 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் பக்கவாதம் ஏற்படுவதற்கான பிரதான அபாய காரணியாக உயர் இரத்தஅழுத்தம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50 வீதமான பக்கவாத சம்பவங்களுக்கு உயர் இரத்தஅழுத்தமே காரணமாக உள்ளது. பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கவும் குறைக்கவும் விழிப்புணர்வு, எச்சரிக்கை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவையே முக்கியம் – என்றார்.
