இலங்கை
சம்பத் மனம்பேரி மறியல் நீடிப்பு
சம்பத் மனம்பேரி மறியல் நீடிப்பு
அண்மையில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரியை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க வலஸ்முல்ல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மித்தெனியப் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பத் மனம்பேரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
