Connect with us

இலங்கை

சீரற்ற காலநிலையால் 12,142 பேர் பாதிப்பு! நால்வர் உயிரிழப்பு!

Published

on

Loading

சீரற்ற காலநிலையால் 12,142 பேர் பாதிப்பு! நால்வர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் 3,036 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்தெரிவித்துள்ளது.

பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

அனர்த்தங்கள் காரணமாக நான்கு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.அத்தோடு அண்மைய நாட்களில் தொடர்ந்து பெய்த மழையால் சுமார் 480 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதகமான வானிலையால் ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் 117 என்ற துரித இலக்கத்தின் மூலமாக தொடர்பு கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன