இலங்கை
செவ்வந்தி பயணித்த படகு யாழ்ப்பாணத்தில் மீட்பு!
செவ்வந்தி பயணித்த படகு யாழ்ப்பாணத்தில் மீட்பு!
இஷாரா செவ்வந்திக்கு உதவிய யாழ். ஆனந்தனின் படகொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இஷாரா பயணித்த படகே இவ்வாறு கைப்பற்றப்
பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியாகும் விசாரணை அறிக்கைகள் மற்றும் அவருக்கு உதவிய தரப்பின் விபரங்கள் தென்னிலங்கைக்குள் மட்டுப்படாது தமிழர் பகுதிகளிலும் தீவிர விசாரணைக்கு உள்ளாகியுள்ளன. இந்த நிலையிலேயே இஷாராவை இலங்கையில் இருந்து நாடு கடத்தப் பயன்படுத்திய படகொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
