Connect with us

சினிமா

புதுப் பேட்டை 2 & ஆயிரத்தில் ஒருவன் 2 Movie ரெடியா.? இயக்குநர் செல்வராகவன் கொடுத்த அப்டேட்

Published

on

Loading

புதுப் பேட்டை 2 & ஆயிரத்தில் ஒருவன் 2 Movie ரெடியா.? இயக்குநர் செல்வராகவன் கொடுத்த அப்டேட்

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கதையாசிரியர் மற்றும் இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் செல்வராகவன். தனித்துவமான கதை சொல்லல் பாணி, ஆழமான உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் மனோதத்துவம் கலந்த கதைகள் இவை அனைத்தும் அவரது படங்களை ரசிகர்களிடம் தனிப்பட்ட அடையாளமாக்கி வைத்துள்ளன.இந்நிலையில், நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த இரண்டு பெரிய படங்கள் குறித்து செல்வராகவன் தனது சமீபத்திய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அவை, “புதுப் பேட்டை 2” மற்றும் “ஆயிரத்தில் ஒருவன் 2” போன்ற படங்கள் ஆகும்.2006 ஆம் ஆண்டு வெளியான புதுப் பேட்டை, தமிழ் சினிமாவில் ஒரு கல்ட் கிளாசிக்காக திகழ்கிறது. அந்த மாயாஜாலம் மீண்டும் திரும்பும் எனும் எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக ரசிகர்களிடையே நிலவி வந்தது. தற்போது, செல்வராகவன் அதனை தானே உறுதி செய்துள்ளார். அதாவது, “புதுப் பேட்டை 2 கதையின் 50% ஏற்கனவே எழுதி முடித்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார். இந்த தகவல் வெளிவந்த சில மணி நேரங்களுக்குள் சமூக ஊடகங்கள் முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். அத்துடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கோரிக்கைகள் பல ஆண்டுகளாக ரசிகர்களிடையே இருந்தன. இப்போது, அதற்கும் செல்வராகவன் பதிலளித்துள்ளார்.அதன்போது, “நான் தற்போது ஆயிரத்தில் ஒருவன் 2 கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.” எனவும் கூறியுள்ளார். இந்த ஒரு வரி ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. முதல் பாகத்தில் கார்த்திக் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது அந்த கதையின் தொடர்ச்சி எப்படி இருக்கும், அதில் யார் நடிப்பார்கள் என்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன