Connect with us

பொழுதுபோக்கு

5-வது படிக்கும்போதே செய்தியாக மாறிய நடிகை; தமிழில் ஹிட் படம் கொடுத்த இவர் யார் தெரியுமா?

Published

on

Navya Naiya

Loading

5-வது படிக்கும்போதே செய்தியாக மாறிய நடிகை; தமிழில் ஹிட் படம் கொடுத்த இவர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், தனக்கென ரசிகர்களை வைத்துள்ள இந்த நடிகை தான் 5-ம் வகுப்பு படிக்கும்போது நியூஸ் பேப்பரில் வந்த தனது புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நடிகை யார் தெரியுமா? அந்த நடிகை வேறு யாரும் இல்லை. நவ்யா நாயர் தான். தான் 5-ம் வகுப்பு படிக்கும்போது வந்த ஒரு செய்தித்தாள் துணுக்கு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நவ்யா நாயர். “திறமையின் ஒளி வானளாவியிருந்தது” என்ற தலைப்புடன் வந்த அந்த செய்தியுடன், நவ்யாவின் குழந்தைப் பருவப் புகைப்படத்தையும் காணலாம்.கேரளாவின் காயம்குளம் செயின்ட் மேரீஸ் உயர்நிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, யுபி (UP) பிரிவு மோனோ ஆக்டில் வி.தன்யா என்ற நவ்யா நாயர் முதலிடம் பெற்றபோது வெளியான செய்தித்தாள் துணுக்கு தான் இந்த பதிவு. அதில் அவரின் பயிற்சியாளரான ஆலப்புழாவைச் சேர்ந்த டி.சுதர்ஷனும் இருக்கிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை நவ்யா நாயர். ‘நந்தனம்’ படத்தில் ‘பாலாமணி’ என்ற கேரக்டரில் நடித்து மலையாளத் திரையுலகில் நுழைந்தார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்திருந்த இவர், ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் தீவிரமாகி வருகிறார். அத்துடன் சின்னத்திரை மற்றும் மேடை நிகழ்ச்சிகளிலும் பிஸியாக இருக்கிறார்.நடிப்புடன் நடனத்திலும் தீவிரமாகச் செயல்படும் நவ்யா நாயரை இப்போது காண முடிகிறது. நடன நிகழ்ச்சிகள் மற்றும் அவரது நடனப் பள்ளியான ‘மாતங்கி’யின் செயல்பாடுகள் என நவ்யா நாயர் பரபரப்பாக உள்ளார். ‘புழு’ படத்திற்குப் பிறகு ரத்தீனா இயக்கிய ‘பாதிராத்திரி’ என்ற திரைப்படமே நவ்யாவின் கடைசியாகத் திரையரங்குகளில் வெளியான படமாகும். இதில் சௌபின் ஷாஹிர் கதாநாயகனாக நடித்துள்ளார். ஒரு இரவில் இரண்டு காவலர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை மையமாகக் கொண்டு ‘பாதிராத்திரி’ திரைப்படம் நகர்கிறது. A post shared by Navya Nair (@navyanair143)நவ்யா நாயர், சௌபின் ஷாஹிர் ஆகியோர் நடித்த ஜான்சி மற்றும் ஹரீஷ் என்ற காவல்துறை கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் மூலம் இக்கதை சொல்லப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 17-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. நவ்யா நாயர் தமிழில் கடைசியாக 2010-ம் ஆண்டு ரசிக்கும் சீமானே என்ற படத்தில் நடித்திருந்தார், 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன