இலங்கை
பத்மேயிடமிருந்து கைத்துப்பாக்கி பெற்ற தொழிலதிபர்
பத்மேயிடமிருந்து கைத்துப்பாக்கி பெற்ற தொழிலதிபர்
கெஹெல்பத்தர பத்மேயிடமிருந்து கைத்துப்பாக்கியை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொடையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் செய்யப்பட்ட சோதனையின்போது துப்பாக்கியுடன் 13 தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஹீனட்டியன மகேஷ் என்பவர் குறித்த தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நிலையில் அது தொடர்பில் தொழிலதிபர் கெஹெல்பத்தர பத்மேவுக்கு அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் பத்மே குறித்த தொழிலதிபருக்கு துப்பாக்கியை வழங்கியதாகவும் அதற்காக தொழிலதிபர், கெஹெல்பத்தரவுக்கு 3,50,000 ரூபாய் வழங்கியதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
