Connect with us

இலங்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு!

Published

on

Loading

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் மீண்டும் அனைத்து வகைக் குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

இதனால், நோயாளர்களுக்குத் தேவையான குருதியை விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

Advertisement

 இதுதொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சரியாக எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 226 பைந்த் குருதியே இருப்பில் இருக்கின்றது. 

தினமும் 35 – 40 பைந்த் குருதி எமது இரத்த வங்கியால் நோயாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. தற்போது விபத்துக்கள், சத்திர சிகிச்சைகள் அதிகரித்துச் செல்வதால் குருதியின் தேவை தினமும் அதிகரித்துச் செல்கின்றது. 

Advertisement

இரத்ததான முகாம்கள் மூலம் குருதி சேகரிக்கப்பட்டாலும் அதுவும் பற்றாக்குறையாகவே இருக்கின்றது. 

 எனவே, குருதிக்கொடையாளர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் பின்பக்க நுழைவாயிலின் ஊடாகத் தினமும் காலை-08 மணி முதல் மாலை-04 மணி வரை நேரடியாக வருகை தந்து குருதிக் கொடை வழங்கி உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன