Connect with us

இலங்கை

பாடசாலை நேர நீடிப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் கருத்து!

Published

on

Loading

பாடசாலை நேர நீடிப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் கருத்து!

பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதன் மூலம், ஆசிரியர்களின் பாடசாலை நேரத்திற்குப் பின்னரான வேலைப்பளு  குறையும் என கல்வி இராஜாங்க அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

Advertisement

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ், தொகுதி முறை  அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், இதன் மூலம் ஆசிரியர்களின் வேலைப்பளு பாடசாலை நேரத்திற்குள் மட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் நீடிக்கப்பட்ட பின்னர், ஆசிரியர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த கல்வி மறுசீரமைப்பின் மூலம் கல்வித் துறைக்கு மிகவும் பயனுள்ள மாற்றம் நடைபெறும்  என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன