Connect with us

இலங்கை

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது!

Published

on

Loading

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில்  நேற்று 07ஆம் திகதி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 31,436 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 740 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 16 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம்  கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 322 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 200 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக 16 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 25 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

மேலும் , பிற போக்குவரத்து குற்றங்களுக்காக  4,869 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன