இலங்கை
பிற்பகல் வேளையில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
பிற்பகல் வேளையில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின் 75 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்தவகையில், ஊவா, தென், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
