Connect with us

இலங்கை

தம்பதி செய்த மோசமான செயல்; பொறிவைத்துப் பிடித்த பொலிஸார்

Published

on

Loading

தம்பதி செய்த மோசமான செயல்; பொறிவைத்துப் பிடித்த பொலிஸார்

  மொனராகலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி ஒன்று வெல்லவாய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களான தம்பதி மொனராகலை – வெல்லவாய பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைதுசெய்யப்பட்ட தம்பதி கொழும்பிலிருந்து வெல்லவாய பிரதேசத்திற்கு ஐஸ் போதைப்பொருளை கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தம்பதியை தவிர மேலும் 5 பேர் 23 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு, கடுவலை, ஹோகந்தர, வெல்லவாய மற்றும் எத்திலிவெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன