இலங்கை
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!
குளியாப்பிட்டிய – தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலகஸ்ருப்ப பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மேற்கு சியம்பலகஸ்ருப்ப தும்மலசூரிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.
கூரிய ஆயுதத்தால் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கொலைக்கான காரணம் வெளியாகவில்லை .
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தும்மலசூரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.