இலங்கை
கிளிநொச்சியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கார் மற்றும் சைக்கிள் என்பன விபத்துக்குள்ளானதில், சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த கந்தையா ஆறுமுகம் (வயது – 56) என்பவரே உயிரிழந்தவராவார்.
காரைச் செலுத்திவந்த சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.