Connect with us

இலங்கை

மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது

Published

on

Loading

மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது

ஹல்துமுல்லையில் போக்குவரத்து விதிகளை மீறி பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதி இன்று (17) கைதுசெய்யப்பட்டதாக ஹல்துமுல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹல்துமுல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் குறித்த சாரதியை சோதனை செய்யப்பட்டதில், சாரதி மதுபோதையில் இருப்பது கண்டறியப்பட்டது.

Advertisement

இதனடிப்படையில் சாரதியை ஹல்துமுல்லை மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்தபோது மதுபோதையில் இருந்தது வைத்திய அறிக்கை மூலம்  உறுதிப்படுத்தப்பட்டது.

பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க குறித்த பஸ்ஸிற்கு வேறு  சாரதியை ஏற்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன