இலங்கை
மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது
மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது
ஹல்துமுல்லையில் போக்குவரத்து விதிகளை மீறி பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதி இன்று (17) கைதுசெய்யப்பட்டதாக ஹல்துமுல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹல்துமுல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலினடிப்படையில் குறித்த சாரதியை சோதனை செய்யப்பட்டதில், சாரதி மதுபோதையில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனடிப்படையில் சாரதியை ஹல்துமுல்லை மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்தபோது மதுபோதையில் இருந்தது வைத்திய அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க குறித்த பஸ்ஸிற்கு வேறு சாரதியை ஏற்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.