இலங்கை
சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் ; தீவிரமாகும் விசாரணைகள்

சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் ; தீவிரமாகும் விசாரணைகள்
அநுராதபுரத்தில் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சியம்பலாகஸ்வெவ, மஹகனதராவ பிரதேசத்திலிருந்து நேற்று (19) இரவு வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.